
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியை ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை எதிர்த்து சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதன்பின் கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே திரும்ப பெற்றுக் கொள்வதாக அவர் கடிதம் ஒன்றை கொடுத்தார். இதையடுத்து நடந்த விசாரணையின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கை முடித்து வைத்த நிலையில், தற்போது மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரிக்க விஜயலட்சமி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன் பிறகு வழக்கு பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் இந்த வழக்கு ஏன் இத்தனை ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். சீமான் தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர் சங்கர் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ராஜா ஆஜராக வேண்டும் என்பதால் வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதையடுத்து இந்த வழக்கு வருகிற 19ஆம் தேதி ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.