வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அருகே பரவக்கல் என்ற கிராமத்தில் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் குலதெய்வ கோயிலில் கற்பூரம் ஏற்றி காட்டிய போது, மேலே அரச மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் கலைந்து அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டியது.

இதில் 11 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் அப்பகுதியில் வெல்டிங் தொழிலாளியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது