கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கும்பகோணத்தில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர் தேசிய தலைவர், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் கிடையாது. அவருடைய சிலைக்கு பாஜக, இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்கு விசிக கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதால், போலீஸ் தடை விதித்திருப்பது வேதனை அளிக்கிறது.

அமைச்சர் பொன்முடி தவறாக பேசியதற்கு அவருடைய கட்சி பதவியை மட்டும் பறித்தது கண் துடைப்பு நடவடிக்கை. பேசிய பிறகு அவருடைய மன்னிப்பு யாருக்கும் தேவை கிடையாது. அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சட்டவிரோதமாக மதத் பிரச்சாரம் செய்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்ணாமலை தமிழக பாஜக கட்சியின் அடையாளமாக திகழ்கிறார். புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அண்ணாமலை உடன் இணைந்து செயல்பட்டு திராவிட மாடல் ஆட்சியை அகற்ற வேண்டும். அவர்களுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினார்.