உக்ரைன், ரஷ்யா போர் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதனை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இந்த போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேவேளை தங்கள் கருத்துக்களை கேட்காமல் அமைதி பேச்சுவார்த்தை சாத்தியம் இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் நோட்டா அமைப்பு இல்லாமல் தங்களுக்கு என்று தனிப் படையை ஐரோப்பிய யூனியன் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் இதனை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா அதிபர் உறுதியோடு இருக்கிறார். இதன் காரணமாக அமெரிக்காவும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது. இது சவூதி அரேபியாவில் உள்ள தலைநகரமான ரியாத்தில் நடைபெற உள்ளது.

அமெரிக்கா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க சிறப்பு தூதர் கீத் கெலொக் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர். அதே போன்று ரஷ்யா சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி லவ்ரோ மற்றும் அதிபர் புதினின் வெளியுறவு துறை ஆலோசகர் யுரி உஷாகவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதன் மூலம் இந்த போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.