பிரேசில் நாட்டில் உள்ள நகரில் குவாருலோஸ் விமான நிலையம் ஒன்று உள்ளது இந்த விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது வானில் இருந்து வந்த மின்னல் ஒன்று விமானத்தின் வால் பகுதியை தாக்கியது. இதனை அங்கிருந்த விமான பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இது குறித்து அந்த பயணி கூறியதாவது, பெரிய புயல் வீசியதால் விமானங்கள் அனைத்தும் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நாங்களும் பாதுகாப்பாக இருந்தோம். அப்போது ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது, விமான நிலைய தரைப்பகுதி அருகே மின்னல் ஒன்று தாக்கியது.

அது விமான வால் பகுதியையும் தாக்கியது. இதனை நான் வீடியோவாக பதிவு செய்தேன் என்று கூறினார். இதுகுறித்து அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, ஆண்டுக்கு சராசரியாக ஓரிரு முறை வர்த்தக விமானம் மீது மின்னல் தாக்குதல் ஏற்படும் என்று கூறினார். இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் தான் விமானம் உருவாக்கப்பட்டுள்ளது என்று  அவர்கள் தெரிவித்தனர். எனினும் மின்னல் தாக்கிய பின்னர் அந்த விமானம் பரிசோதனைக்கு அனுப்பட்டது. இதனால் விமானம் வர தாமதம் ஆனது. மேலும் பயணிகளும் சரியான நேரத்தில் புறப்பட முடியாமல் அவதிப்பட்டனர்.