இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகிறது. அந்த வகையில் மும்பை லோக்கல் ரயிலில் நடந்த ஒரு பிரச்சனை குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில்  பெண்களுக்கு இடையே பிரச்சனைகள் நடக்கும் ரயிலா இது? இல்லையெனில் வீரர்கள் பங்கேற்கும் யுத்த மேடையா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு பிரச்சனை அதிகரித்துள்ளது.

அதாவது சமீபத்தில் மும்பை லோக்கல் ரயிலில் உள்ள பெண்கள் பெட்டியில் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென அவர்கள் முடியை பிடித்து இழுத்து சண்டையிட்டனர். இதனை சுற்றி இருந்த அனைவரும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இந்த வீடியோ எக்ஸ் தளத்தில்  மும்பை லோக்கல்” என்னும் தலைப்பில் மிகவும் வேகமாக வைரல் ஆனது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் ஒருவர் டெல்லி மும்பை ரயில்களில் இது சாதாரணமாகிவிட்டது என்று கூறியுள்ளார். இன்னொருவர் பெண்கள் சண்டையில் முடியை இழுத்தால் தான் அது முழுமையாக இருக்கும் என்று நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ஒருவர் “உண்மையில் இத்தகைய சண்டைகள் மற்ற பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதாக இருக்கும் நிலையில் இது பற்றி கவலை கொள்ள வேண்டிய நேரம் இது தான்”என்று கருத்து தெரிவித்துள்ளார்.