ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தினை நாட்டுக்கு அர்ப்பணித்து, இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து, வாகன பேரணியையும் நரேந்திர மோடி நடத்தினார். அப்போது பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் சாலை ஓரத்தில் இருந்தபடி கோஷங்களை எழுப்பினர். அவரது வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதன்பின் மக்கள் முன் பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, தமிழ் மொழியின் பாரம்பரியம் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடைந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் பாரம்பரியத்தை மேலும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல வேண்டும். மீனவர்களின் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மத்திய அரசு துணை நிற்கும். கடந்த 10 ஆண்டுகளில் 3700 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து எனக்கு கடிதம் எழுதுபவர்களின் கையெழுத்து ஆங்கிலத்தில் இருக்கிறது.

அதை தமிழில் போடுங்கள். 100 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பன் பாலத்தை கட்டியது ஒரு குஜராத்தி. இன்று புதிய பாம்பன் பாலத்தை குஜராத்தி ஆகிய நான் திறந்து வைத்துள்ளேன். தேசத்தின் அனைத்து இடங்களிலும் பாஜக தொண்டர்கள், மக்களுக்கு சேவை ஆற்றுவதை பார்த்து பெருமைப்படுகிறேன். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வணக்கம், மீண்டும் சந்திக்கிறேன் என்று தனது உரையை பிரதமர் மோடி முடித்துக் கொண்டார்.