
சேலம் மாவட்டத்தில் உள்ள பளையூர் சித்திரத்தில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரோகிணி எம்.காம் பட்டதாரி. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகன் இருக்கிறான். நேற்று காலை ரோகிணி தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோகிணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.