விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த ஒட்டம்பட்டு கிராமத்தில் ஜெயக்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மகேந்திரனுக்கு(32) பவித்ரா(28) என்ற மனைவியும் மூன்று வயதில் துருவா(3) என்ற மகனும் இருக்கின்றனர். மகேந்திரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இருக்கும் ஏரியில் நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளார்.

அப்போது வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த மகேந்திரனை அவரது நண்பர்கள் மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மகேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.