கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் சம்பத்குமார்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் சம்பத் குமார் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் சித்ரா தனது கணவரை கண்டித்துள்ளார்.

இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி கடந்த சில நாட்களாக சம்பத்குமார் நண்பர்களுடன் தங்கி இருந்தார். பின்னர் வாழ்க்கையை வெறுத்து விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.