கரூர் மாவட்டத்தில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி இருந்து 7 வயது சிறுவன் பள்ளிக்கு சென்று வந்துள்ளான். கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுவன் அருகே இருக்கும் கடைக்கு பேனா, பென்சில் வாங்குவதற்காக சென்றுள்ளான். அப்போது அதே பகுதியில் வசிக்கும் ஆனந்த் என்பவர் சிறுவனை வழிமறித்து சற்று தூரத்தில் இருக்கும் பள்ளிக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து ஆனந்த் சிறுவனிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதோடு, இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அச்சத்தில் சிறுவன் நடந்தவற்றை தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஆனந்தை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் ஆனந்துக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 1 1/2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.