
கன்னியாகுமரி மாவட்டம் குளித்தலை பகுதியில் 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். இந்த நிலையில் கூலி தொழிலாளர் நடராஜ்(40) என்பவர் அடிக்கடி சிறுமியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். சம்பவம் நடந்த அன்று நடராஜ் சிறுமியின் வீட்டிற்கு சென்ற போது அங்கே யாரும் இல்லை.
இதனால் நடராஜ் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் நடராஜை கைது செய்தனர்.