
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சரானால் மாநில தலைவர் பதவியில் மாற்றம் ஏற்படும் என்று கூறப்பட்டது. இதற்கிடையில் டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற பிரதமர் மோடியின் தேநீர் விருந்தில் தமிழகத்திலிருந்து எல். முருகன் மட்டும் பங்கு பெற்றார்.
அதேபோல நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் பங்கேற்றனர். இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, மத்திய அமைச்சராக நியமிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் முக்கியம். எல்லாமே முக்கியம். கட்சி தலைமை வழங்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.