
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல் என்பவரின் மனைவி திவ்யா. இந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வடிவேல் காணாமல் போன நிலையில் நேற்று கோவில்பாளையம் பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து வடிவேல் குடும்பத்தினரிடம் காவல்துறை நடத்திய விசாரணையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான வடிவேல் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவரின் மாமியார் மரியா தனது கள்ளக்காதலனுடன் இணைந்து வடிவேலை கொலை செய்துள்ளனர். பின்னர் வடிவேலின் மனைவி திவ்யா, மாமியார் மரியா, மாமனார் தேவராஜ், மாமியாரின் கள்ளக்காதலன் பாலாஜி ஆகியோர் அவரை கிணற்றில் வீசியதாக ஒப்புக்கொண்டதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.