சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் மூலம் பொது போக்குவரத்து முறைகளில் பயணம் செய்வதற்கு ஒரே டிக்கெட் வழங்கப்பட உள்ளது. பிரத்யேக கார்டு வழங்கி ரீசார்ஜ் செய்து பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டிக்கெட் மூலமாக சென்னையில் அரசு பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் என மூன்று பொது போக்குவரத்திலும் பயணம் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த முறையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்