சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என அனைத்திலும் ஒரே டிக்கெட் பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. தற்போது இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான இறுதி கட்ட பணி தொடங்கியுள்ளது.

அந்த வகையில் ஒரே டிக்கெட் முறையை சென்னையில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்காக மத்திய அரசின் சென்டர் பார் டெவெலப்மென்ட் ஆப் அட்வான்ஸ் கம்யூனிட்டி நிறுவனத்துடன் ஆலோசனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் கூறியதாவது, புறநகர் ரயில், மெட்ரோ ரயில், பேருந்து என அனைத்திலும் பயணம் செய்யும் வகையிலான ஒரே டிக்கெட் முறை விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்துள்ளது.