அடுத்த 3 மாதங்களில் 3 ராக்கெட்டுகளை செலுத்த திட்டமிட்டு இருப்பதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவா் எஸ்.சோம்நாத் தெரிவித்தாா். அதாவது, எஸ்எஸ்எல்வி, எல்விஎம்-3, பிஎஸ்எல்வி ஆகிய 3 ராக்கெட்டுகள் இஸ்ரோவால் ஏவப்பட இருப்பதாக அவா் தெரிவித்தாா். விண்வெளி குறித்த 3 நாட்கள் பயிலரங்கத்தை எஸ்.சோம்நாத் பெங்களூரில் துவங்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளா்கள் சந்திப்பின்போது எஸ்.சோம்நாத் கூறியிருப்பதாவது “ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத இறுதியில் எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை செலுத்த திட்டமிட்டு உள்ளோம். அடுத்த ஒன் வெப் திட்டத்துக்கான எல்விஎம்-3 ராக்கெட்டும் பிஎஸ்எல்வி ராக்கெட்டும் வா்த்தக ரீதியில் அடுத்த 3 மாதங்களில் ஏவப்பட இருக்கிறது.  மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் விண்கலனை செலுத்தும் சோதனை முயற்சியானது ஏப்ரல் (அ) மே மாதங்களில் நடைபெறும் என தெரிவித்தாா்.