
சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில் ஒரு ராஜநாகமானது பாட்டிலில் தண்ணீர் குடிப்பதை காண முடிகிறது. இந்த நாகம் வாயை திறந்துக்கொண்டிருக்கும் நிலையில், ஒருவர் அதன் முகத்துக்கு நேராக ஒரு பாட்டில் தண்ணீரை நீட்டுகிறார். அதன்பின் பாம்பு தண்ணீரை மனிதர்கள் குடிப்பது போன்று குடிக்கிறது. அதிசயமாக அந்த நாகம் தண்ணீர் கொடுத்தவரை ஒன்றும் செய்யவில்லை .
View this post on Instagram