
ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஐஆர்எஸ் அதிகாரி அனுசுயா. இவர் அங்கு இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பெண்ணாக இருந் இவர் திடீரென்று ஆணாக மாறியுள்ளார். மேலும் தன்னுடைய அனுசுயா என்ற பெயரை அனுகதிர் சூர்யா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து அவர் தன்னுடைய பெயர், பாலினத்தை மாற்றிக் கொண்டதை ஏற்று, ‘திருமதி அனுசுயா’ என்பதற்கு பதில் ‘திரு அனுகதிர் சூர்யா’ என்று அங்கீகரிக்கப்படுவார் என அரசு உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே சிவில் சர்வீசஸ் வரலாற்றில், பெண் அதிகாரி ஒருவர் ஆணாக மாறியது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.