
தேர்தல் பணிக்காக பெங்களூரு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு காய்ச்சல் இருப்பதால் அவர் பங்கேற்க இருந்த அனைத்து கட்சி நிகழ்ச்சிகளும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் தென்காசியில் அண்ணாமலை கலந்து கொள்ள இருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தற்போது பெங்களூருவில் உள்ள நண்பரின் வீட்டில் அவர் ஓய்வு எடுப்பதாகவும் விரைவில் தமிழகம் திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவற்றில் பதிவு வெளியிட்டுள்ளார்.