
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்பலநாயுடு மற்றும் அவரது மனைவி ஜெயம்மா கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களது மகன் ராஜசேகர், சொந்தமாக நிலத்தை விற்க விரும்பியுள்ளார். ஆனால் பெற்றோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால், தந்தை, தாயார் மற்றும் மகனுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று டிராக்டர் மூலம் நிலத்தை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜசேகரை, பெற்றோர் வந்து தடுத்து நிறுத்தினர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு , ஆத்திரமடைந்த ராஜசேகர், தனது பெற்றோர் மீது டிராக்டரை ஏற்றி கொன்று விட்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய ராஜசேகரை தேடி வருகின்றனர்.