
யூடியூப் புகழ் வேண்டுமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு சமீபத்திய சம்பவம் ஒன்று உதாரணமாக அமைந்துள்ளது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குல்சார் ஷேக் என்ற நபர் தனது யூடியூப் சேனலுக்காக ரயில் தண்டவாளத்தில் சைக்கிள், சோப்பு, கற்கள் போன்றவற்றை வைத்து வீடியோ எடுத்துள்ளார்.
இந்த விபரீதத்திற்கு பின்னால் ஆயிரக்கணக்கான பயணிகளின் உயிர் ஆபத்தில் உள்ளது. இதுபோன்ற வீடியோக்களை பல யூடியூப் சேனல்கள் வெளியிட்டு வருகின்றன. இதன் மூலம் லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்று பணம் சம்பாதிக்கின்றனர்.
இதுபோன்ற செயல்களால் ஏற்படும் விபத்துகளுக்கு யார் காரணம் என்பது தெரியவில்லை. இதுபோன்ற செயல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
This is Mr Gulzar Sheikh from Lalgopalganj, UP who puts random things Infront of trains for YouTube Money, He is putting lives of 1000s of passengers in danger.
Strict action should be taken against him, @RailwayNorthern @rpfnr_ @drm_lko Sharing all the information Below👇 pic.twitter.com/g8ZipUdbL6— Trains of India (@trainwalebhaiya) July 31, 2024
“>