
தமிழகத்தில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதாவது ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சுங்க கட்டணம் உயர்வால் மளிகை மற்றும் காய்கறிகளை ஏற்றி செல்லும் லாரி, சரக்கு வாகனங்கள் ஆகியவற்றின் வாடகையும் உயரக்கூடும். இதனால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் என்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.