தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் எஸ்.ஜே சூர்யா. இவர் குஷி மற்றும் வாலி போன்ற படங்களை இயக்கியுள்ள நிலையில் வியாபாரி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் தற்போது படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.  இவர் நடிகர் மட்டுமல்ல இயக்குனராகவும் கலக்கி வருகிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய எஸ்.ஜே சூர்யா இயக்குனராக தன்னுடைய பெயரை மாற்றிய பாடம் குஷி என்றும் அந்த படம் குறித்தும் பேசி உள்ளார்.

அதாவது படம் எடுத்து முடித்த பிறகு குஷி படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்த யாருக்கும் படம் பிடிக்கவில்லை. ஆனால் அந்த படம் ரிலீஸ் ஆனதும் பெரிய ஹிட் அடைந்ததாக கூறியுள்ளார். ஒருவேளை ரிலீஸ் ஆன பிறகு படத்திற்கு எதிர்மறை விமர்சனம் வந்திருந்தால் அந்த வலியால் நான் செத்துப் போய் இருப்பேன் என்று கூறியுள்ளார்.