
இந்தியா முழுவதும் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 22 கல்லூரிகளும் மராட்டிய மாநிலத்தில் 14 கல்லூரிகளும் அமைய இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்திற்கு 5 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, சென்னை அவனம்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணன் கோவில் பகுதி, திண்டிவனம் தாலுகா ஓங்கூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் தனியார் சார்பில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கிறது. மேலும் தமிழகத்தில் எம்பிபிஎஸ் படிப்புக்காக தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவலின்படி மொத்தம் 58 கல்லூரிகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.