
தமிழகத்தின் புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளியில் 6 முதல் 12 வரை படித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும். இதேபோன்று மாணவர்களுக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தை அரசு பள்ளிகள் போன்று அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்தது.
அந்த வகையில் அரசு இன்று முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் திட்டத்தை விரிவாக்கம் செய்கிறது. மேலும் அதன்படி இன்று தூத்துக்குடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகளுக்கும் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.