
காலி மது பாட்டில்களை டாஸ்மாக்கே திரும்ப பெறும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், திருச்சி மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு செயப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, ஏப்ரல் முதல் தமிழகம் முழுவதும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே நீலகிரி, குமரி, தருமபுரி போன்ற மாவட்டங்களில் காலி பாட்டில்களை கொடுத்தால் ₹10 திரும்ப வழங்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுகிறது. இதனால் பாட்டில் கழிவுகள் குறையும் என சமூகநல ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.