
அமெரிக்காவின் மொன்டானாவில் உள்ள பனிப்பாறை தேசிய பூங்காவுக்கு கலிபோர்னியாவில் வசிக்கக்கூடிய இந்திய இளைஞர் சித்தாந்த் பாட்டீல் தன்னுடைய நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு ஏரியில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவருடைய உடல் மாயமான நிலையில் தற்போது சுமார் 28 நாட்களுக்கு பிறகு நேற்று அவரது உடல் அவலாஞ்சி கிரிக் அருகே கண்டெடுக்கப்பட்டது. ரேஞ்சர்ஸ் பள்ளத்தாக்கில் ஒரு பாறை அருகே சடலம் மீட்கப்பட்டது. அவரது உடைகள் மற்றும் உபகரணங்களால் இறந்தவர் யார் என்று அடையாளம் காணப்பட்டது.