தர்மபுரி மாவட்டம் பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குழந்தையம்மாள்(36). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்கிறார். இவருக்கு வைஷாலி(17) என்ற மகளும், விஷால்(16) என்ற மகளும் உள்ளனர். இதில் வைஷாலி 10-ஆம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்தார். கடந்த 18-ஆம் தேதி குழந்தையம்மாள் தேக்லான்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன்(29) என்பவரை வைஷாலிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த வைஷாலி திருமணம் ஆன அன்றே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் குழந்தையம்மாள், தாமோதரன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.