அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் விக்கிரவாண்டி இடை தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். இது தொடர்பாக நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏவும் விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக மற்றும் அதிமுக என்ற களத்தை சாதியவாத மதவாத சக்திகள் பிரித்து விடக்கூடாது என்பதே தமிழ்நாட்டின் விருப்பம். ஆனால் அதற்கு முரணாகவே அதிமுக நடந்து கொள்கிறது. அவர்கள் பாஜகவுக்கு வலு சேர்த்து அன்றும், பாமகவுக்கு வாய்ப்பு கொடுத்து இன்றும் களத்தை இழக்கிறார்கள். மேலும் அரசியலில் இருந்து ஒதுங்குவதும்  ஓய்வெடுப்பதும் தற்கொலைக்கு சமம் என்று பதிவிட்டுள்ளார்.