மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை வரம்பை 25 சதவீதம் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதாவது அதிகபட்ச கருணைத்தொகை 20 லட்சத்திலிருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கருணைத் தொகை ஜனவரி 1, 2024 முதல் தொடங்குகிறது. பணிக்கொடைக்கு தகுதி பெற ஒரு ஊழியர் குறைந்தது 5 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும். முன்னதாக மார்ச் 7ஆம் தேதி 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.