தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் இன்று காலை 10 மணி வரையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்திற்கு திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய 5 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும் இதே போன்று கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதேபோன்று புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.