
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே பேய்குளம் பகுதியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் 11ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த மே மாதம் இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் நண்பர்கள் உதவியுடன் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு வழக்கம் போல பள்ளிக்கு சென்று வந்தனர். நேற்று முன்தினம் அந்த மாணவி மீது பெற்றோருக்கு சந்தேகம் வந்தது.
அப்போது தங்களது மகளிடம் விசாரணை நடத்திய போது மாணவியை 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவனை தேடி வருகின்றனர். மேலும் அந்த மாணவியை மீட்டு தூத்துக்குடியில் இருக்கும் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர். அலைபாயுதே திரைப்படப்பாடல் மாணவியும் மாணவனும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.