
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புது விதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக செல்ல பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோவிற்கு நினைவே இருக்காது. தற்போது குளத்தில் ஆனந்த குளியல் போட்ட ஒரு யானையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. யானைகள் என்னதான் பார்ப்பதற்கு கம்பீரமாக இருந்தாலும் குழந்தைகள் போல் அவை செய்யும் சில சேட்டைகள் காண்போரை ரசிக்க வைக்கும். தற்போது அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பொதுவாக வீட்டில் பேர குழந்தைகளை பெற்றோர்கள் அடித்து விட்டால் உடனே தாத்தா பாட்டு ஓடி வந்து அவர்களை சமாதானப்படுத்துவார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் இங்கு நிகழ்ந்துள்ளது. காட்டில் ஒரு கூட்டத்தில் பெரிய யானை குட்டி யானையை தாக்கி கீழே தள்ளி விடுகிறது. அப்போது கீழே விழுந்த குட்டி யானை சத்தமிட்டு அழ உடனே 3 பெரிய யானைகள் ஓடி வந்து குட்டி யானையை பாதுகாத்து எழுந்திருக்க உதவி செய்தன. அதன் பிறகு தன்னுடைய தும்பிக்கையால் அந்த குட்டி யானையை தடவி கொடுத்து ஆறுதல் படுத்தின. அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
Elephant attacks her sibling. A group of three mother elephants rush to his aid after he cries in pain pic.twitter.com/zkauaRlals
— Domenico (@AvatarDomy) May 4, 2023