நாகை அருகே வாய்க்கால் புதரில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் கிடந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்தப் பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? அவரை யாராவது கொலை செய்து உடலை தூக்கி வீசி சென்றனரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.