
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே மேலத்தானியம் பெரிய கண்மாயில் முதியவர் ஒருவர் உடல் அழுகிய நிலையில் எலும்புக்கூடாக கிடந்துள்ளதை பார்த்த அப்பகுதி மக்கள் காரையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி , சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரித்ததில் பிணமாக மீட்க பட்டவர் காயாம்பட்டியை சேர்ந்த ராமையா ( 70) என்பது தெரியவந்தது. கடந்த ஆண்டு நவம்பர் 22-ஆம் தேதி ராமையா சடையம்பட்டிக்கு சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கடந்த மாதம் 27-ஆம் தேதி காரையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பிணமாக கிடந்த அந்த முதியவர் இலுப்பூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகின்ற ராதாகிருஷ்ணன் என்பவரின் தந்தை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.