
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கு தயாராகி வருகிறது. 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியக்கங்களை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் திமுகவில் கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் சரிவர பணி செய்யாவிடில் அவர்களை பணியில் இருந்து தூக்கி விட்டு வேறொருவர் நியமிக்கப்படுவார் என்று முன்னதாக தலைமை கழகம் அறிவித்திருந்தது.
அதாவது திமுகவில் சமீபத்தில் அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட நிலையில் சரியாக பணி செய்யாத மாவட்ட செயலாளர்களின் பதவி பறிக்கப்படும் என்று எச்சரிக்கபட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம் மதுரா செந்திலை அந்த பொறுப்பில் இருந்து விடுவிப்பதாக தற்போது திமுக தலைமை தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு பதிலாக கே.எஸ் மூர்த்தி புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.