மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டயிட்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தோல்வியை சந்தித்தார். இந்த நிலையில் அவருக்கு எதிராக பல விமர்சனங்கள் வந்த நிலையில் அவருடைய புகைப்படத்துடன் நடுரோட்டில் ஆட்டை பலியிட்டு பயங்கரம் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆட்டின் கழுத்தில் அண்ணாமலையின் புகைப்படத்தை மாட்டி, நடுரோட்டில் பலியிட்டு அண்ணாமலைக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.

இந்த பயங்கரமான செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, ஆட்டை பலியிட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.