
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆலங்கொம்பு அருகே சென்ற போது ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் நகுலன்,மிதுன் மற்றும் மிஜூன் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வினித் படுகாயம் அடைந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த வினித்தை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி வினித் உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.