சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடக்கு ராஜ வீதியில் 49 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் இணையதளத்தில் கடன் வழங்கும் செயலி மூலம் ஜூன் மாதம் 2 தவணையாக 4 ஆயிரத்து 556 ருபாய் வாங்கியுள்ளார். அந்த பணத்தை ஜூலை மாதம் இரண்டு நபர்களுக்கு 7 ஆயிரத்து 217 ஆக செலுத்தியுள்ளார். இந்நிலையில் பணத்தை பெற்ற நபர்கள் கூடுதலாக பணம் செலுத்த வேண்டும் என கூறினர்.

அப்படி இல்லை என்றால் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி விடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜுடன் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.