2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு தனி பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் இருவரும் முக்கிய அமைச்சர் பதவிகளை குறி வைத்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி மக்களவை சபாநாயகர் மற்றும் இரண்டு மத்திய அமைச்சர் பதவியை கேட்டு பெற முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

அதனைப் போலவே பீகாரில் 12 எம்பிக்களை வென்றுள்ள ஐக்கிய ஜனதா தள தலைவரும், முதல் வருமான நிதீஷ் குமார் விவசாயத்துறை, ரயில்வே அல்லது தொழில்துறை போன்ற முக்கிய இலாக்காக்களை குறி வைப்பதாகவும் கூறப்படுகின்றது. அதனைப் போலவே நான்கு மத்திய இணைய அமைச்சர் பதவியை நித்திஷ் குமார் எதிர்பார்த்து காத்துள்ளார்.