இனி என்ன சொல்ல போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே..? என்று ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களில் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றார்கள் என்பது தெரியாதா? சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். அதை நாம் வலியுறுத்தினோம்.

மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக் கொள்கிறார். இனி என்ன சொல்ல போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே..? என்று ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தன்னுடைய x பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.