புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி அதிகாரம் பெற்றது முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு தகுந்தாற்போல குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் பயனடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவுகள் ஏப்ரல் நான்காம் தேதி இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மத்திய அரசு விடுமுறை தினம் என்பதால் வெளிப்புற சிகிச்சை பிரிவுகள் இயங்காது, அவசர சேவைகள் வழக்கம் போல இயக்கும் என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது