
தமிழகத்தை பொறுத்தவரையில் அரசு விடுமுறைகள் அறிவிக்கப்பட்டாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரசித்தி பெற்ற கோவில் பண்டிகைகளின் போது உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அன்றைய தினம் அம்மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. அதன்படி தற்போது ஆடி கிருத்திகை ஜூலை 29ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவிலுக்கு ஆயிரம் கணக்கில் பக்தர்கள் வருவது வழக்கம்.
இதனால் அம்மாவட்டத்திற்கு ஜூலை 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 29ஆம் தேதி விடுமுறை எனவும் இதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.