பொதுவாக ரயில் நிலையங்கள் என்றாலே அங்கே கண்டிப்பாக பெயர் பலகையானது இருக்கும். ஆனால் நம் நாட்டில் ஒரு ரயில் நிலையத்தில் பெயர் பலகை கிடையாது.  இருப்பினும் அங்கு ரயில்கள் நிற்கின்றன என்றால் நம்மால் நம்ப முடிகிறதா..? ஆம், இந்த ரயில் நிலையம் மேற்கு வங்கத்தில் ரெய்னா & ரெய்னாகத் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

இந்த ரயில் நிலையத்திற்கு ரெய்னாகத் நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது. சில சர்ச்சையின் காரணமாக ரயில் நிலையத்தின் பெயரை ரயில்வே துறை நீக்கியது. தற்போது அந்த ரயில் நிலையம் தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.