டெல்லி உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள், போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிகமாக பாலியல் வன்கொடுமை வழக்குகளும் போக்சோ வழக்குகளும் வரும் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதை கருத்தில் கொண்டு இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.