
மத்திய மோட்டார் வாகன விதிப்படி இனி 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்ற பிறகு தான் ஓட்டுனர் உரிமம் பெற முடியும் என தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளை இனி பயன்படுத்தி விண்ணப்பதாரர்களுக்கான மருத்துவ சான்றிதழை மின்னணு மூலமாக மட்டுமே பதிவேற்றம் செய்ய இயலும்.
இந்த சாரதி மென்பொருளில் மருத்துவர்கள் தங்களுடைய விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும் தங்களது பதிவுகளை உறுதி செய்வது குறித்தும் நாளை காலை 11 மணியளவில் மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலம் ஒரு செயல்முறை விளக்கம் காண்பிக்கப்படும். அதில் கலந்துகொண்டு தங்களது பதிவுகளை உறுதி செய்யும் முறைகள் குறித்து மருத்துவர்கள் அறிந்து கொள்ளலாம் எனவும் மருத்துவரிடம் சான்றிதழ் பெட்ரோல் மட்டுமே புதிய ஓட்டுநர் உரிமம் பெறவோ அல்லது பழைய ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்கவும் இயலும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.