
தமிழகத்தில் தற்போது லீஸ், ரத்து ஆவணம், பவர் பத்திரம் உள்ளிட்ட சிறிய அளவிலான பண மதிப்புடைய ஆவணங்களுக்கான கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது. முன்னதாக 20 ரூபாய் பத்திரங்களை வீட்டு வாடகைகள் மற்றும் ஒத்தி போன்றவைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் சிறிய அளவிலான ஒப்பந்தங்களுக்கு கூட 200 ரூபாய் மதிப்பிலான பத்திரத்தை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து தற்போது 20 ரூபாய் பத்திரத்தை 200 ரூபாயாக அரசு உயர்த்தி உள்ளது. மேலும் கடந்த வருடம் பெரிய அளவிலான பத்திரப்பதிவு மற்றும் ஒப்பந்தங்களுக்கான முத்திரைதாள் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் உயர்த்தப்பட்டுள்ளது.