தமிழகத்தில் வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயங்குவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் அதற்கான கால அவகாசம் ஜூன் 17 இன்றுடன் நிறைவடைகிறது. இதற்காக பேருந்து உரிமையாளர்களுக்கு நான்கு முறை அவகாசம் வழங்கியபோதிலும் 547 ஆம்னி பேருந்துகள் இன்னும் TN பதிவெண் பெறாமலேயே இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஜூன் 18 நாளை முதல் வெளி மாநில பதிவெண்ணுடன் பேருந்துகள் இயங்கினால் கையகப்படுத்தப்பட்டு நடவடிக்கையும் எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது.