
கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலை க்கழக இணைப்பு கல்லூரிகளில் மாணவர்களுக்கு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் நடந்தது. இந்த நிலையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாக உள்ளதாக பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து மாணவர்கள் தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையதளம் மூலமாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டலுக்கு வருகின்ற ஜூலை 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு துணைத் தேர்வு செப்டம்பர் எட்டாம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.